search icon
என் மலர்tooltip icon
    • 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • இதனால் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் இருந்து சிஎஸ்கே அணி வெளியேறியது.

    ஐபிஎல் தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டு பிளேசிஸ் 54 ரன்கள் குவித்தார். சென்னை தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், துஷார் தேஷ்பாண்டே, சாட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் - ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். ருதுராஜ் கோல்டன் டக் முறையில் வெளியேறினார். அடுத்து வந்த மிட்செல் 4 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ரச்சின் மற்றும் ரகானே ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    அதிரடியாக விளையாடிய ரகானே 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துபே 7 ரன்னிலும் ரச்சின் 61 ரன்னிலும் மிட்செல் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து டோனி மற்றும் ஜடேஜா ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 12 பந்தில் 35 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 6 பந்துக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய நிலையில் கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்சரை பறக்க விட்ட டோனி 2-வது பந்தில் அவுட் ஆனார்.

    இறுதியில் சிஎஸ்கே அணி வெற்றி இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது. 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆர்சிபி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    • விவசாயிகளின் உழைப்பு குறைத்து மதிப்பிடப்படுவதாக வேதனை.
    • வீடியோ சமூக ஊடக தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    வெங்காயம் மற்றும் பூண்டு விலையில் கடும் பின்னடைவைச் சந்தித்த பிறகு, மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் பச்சை மிளகாயின் விலை வீழ்ச்சியால் வேதனை அடைந்துள்ளனர்.

    ஒரு கிலோ மிளகாய், 6 முதல் 7 ரூபாய் வரையிலும், சந்தை விலை கிலோ, 30 முதல், 40 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.

    விவசாயிகள் பச்சை மிளகாய் நிரப்பப்பட்ட மூட்டைகளை சாலைகளில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் வீடியோ சமூக ஊடக தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    கொள்முதல் மற்றும் விற்பனை விலைகளுக்கு இடையிலான இந்த பரந்த வேறுபாடு காரணமாக விவசாயிகள் ஆத்திரமடைந்துள்ளனர். விவசாயிகளின் உழைப்பு குறைத்து மதிப்பிடப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    • இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • கோலி - டு பிளிசிஸ் சிறப்பான துவக்கம் தந்தனர்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. கோலி - டு பிளிசிஸ் சிறப்பான துவக்கம் தந்தனர். அதிரடியாக விளையாடிய கோலி 47 ரங்களில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மறுமுனையில் நிதானமாக ஆட்டத்தை துவங்கி பின்னர் அதிரடியாக விளையாடிய டு பிளிசிஸ் 54 ரன்கள் அடித்து ரன் அவுட்டானார்.

    பின்னர் இணைந்த படிதார் - க்ரீன் ஜோடி சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சித்தடித்தனர். அதிரடியாக விளையாடிய படிதார் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 14 ரென்னும் மேக்ஸ்வெல் 16 ரென்னும் அடித்து ஆட்டமிழந்தனர். கிறீன் 38 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது.

    சென்னை தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், துஷார் தேஷ்பாண்டே, சாட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.

    சென்னை அணிக்கு 219 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி. இப்போட்டியில் 201 ரன்கள் அடித்தால் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டாலும் கூட சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    • பிரபாகரனின் அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் முன்னெடுப்பில் வீரவணக்க நிகழ்ச்சி.
    • விடுதலைப் புலிகளும், ஆதரவு அமைப்புகளும் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் வழக்கம் இல்லை.

    பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சை உலகெங்கும் தொடரும் நிலையில், அவரது சகோதரர் மனோகரன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    2009 ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரன், மனைவி மதிவதனி, பிள்ளைகள் மரணமடைந்து விட்டதாக பிரபாகரனின் அண்ணன் மனோகரன் கூறியிருந்தார்.

    மேலும், ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 2009, மே 18ல் பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை ராணுவம் அறிவித்தது. பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ந்தேதி நடத்த உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

    அதன்படி, டென்மார்க்கில் இன்று முதல் முறையாக பிரபாகரனுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

    பிரபாகரனின் அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் முன்னெடுப்பில் வீரவணக்க நிகழ்ச்சி நடந்தது.

    இந்நிகழ்ச்சியில், பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன்கள் சார்ல்ஸ், பாலச்சந்திரன் உள்ளிட்டோருக்கு வீரவணக்கம் செய்யப்பட்டது.

    விடுதலைப் புலிகளும், ஆதரவு அமைப்புகளும் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் வழக்கம் இல்லை.

    காசி ஆனந்தன் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.
    • கங்குவா படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகியது.

    தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.

    இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதி காட்சி படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது .

    கங்குவா படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகியது. வெளியான குறுகிய நேரத்தில் பலக் கோடி பார்வைகளை பெற்றது. டீசரில் சூர்யா மிக அற்புதமாக நடித்து இருப்பார். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் தனஞ்செயன் செய்தியாளர்களிடம் கங்குவா படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா கங்குவா திரைப்படத்தை வரும் திபாவளிக்கு வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார் எனவும். இந்தாண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் படத்தின் வி.எஃப்.எக்ஸ் மற்றும் 3டி வேலைகள் முடிந்துவிடும் எனவும், படத்தை 10 மொழிகளிலும் வெளியிடப்போவதாக கூறியுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • நிஷா திவாரி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
    • இந்த சம்பவம் மே 15 மாலை 5:30 மணியளவில் நடந்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் சாரதா நகர் பகுதியில் வசிக்கும் முதியவர் 2 நாய்க்குட்டியை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

    இந்த மனிதாபிமானமற்ற செயல் முதியவரின் பக்கத்து வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    நிஷா திவாரி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அதில், "லக்னோ, சாரதா நகர் பகுதியில் வசிக்கும் ஸ்ரீவஸ்தவா என்ற முதியவர், மதியம் 2 நாய்க்குட்டிகளை அக்கம் பக்கத்தில் இருந்து எடுத்தார். பின்னர் அவர் அவற்றை வீட்டிற்குள் கொண்டு சென்றார். அங்கு நாய்குட்டிகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து, அவர் அவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து அப்புறப்படுத்தினார்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் மே 15 மாலை 5:30 மணியளவில் நடந்துள்ளது. லக்னோ போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பிரபலமான சுற்றுலா இடத்தை குறிவைத்து துப்பாக்கிச்சூடு
    • பலி எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

    மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் மாகாணத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஆறுபேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் ஸ்பெயின் நாட்டைச் சேரந்தவர்கள். துப்பாக்கிச்சூடு பிரபலமான சுற்றுலா பகுதியில் நடைபெற்றது.

    இது தொடர்பாக ஏழு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும். பொறுப்பேற்கவில்லை.

    உயிரிழந்த வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தகவல் வெளியிடாத நிலையில், ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சகம், தங்கள் நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயம் அடைந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

    காயம் அடைந்தவர் காபுல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

    தலிபான் அரசுக்கு எதிரான குழுக்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், மசூதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறியது.

    • இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. 3 ஓவர் முடிவில் 31 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் கோலி 9 பந்துகளில் 19 ரன்களும், டு பிளிசிஸ் 9 பந்துகளில் 12 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் மழை நின்றதால் மீண்டும் போட்டி தொடங்கியுள்ளது. ஓவர்கள் குறைக்கப்படமால் 20 ஓவர் போட்டியாகவே மீண்டும் போட்டி தொடங்கியுள்ளது.

    இப்போட்டியில் பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. 3 ஓவர் முடிவில் 31 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் கோலி 9 பந்துகளில் 19 ரன்களும், டு பிளிசிஸ் 9 பந்துகளில் 12 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியை காண பெண்கள் பிரீமியர் லீக் கோப்பை வென்ற RCB மகளிர் அணியை சேர்ந்த ஸ்மிரிதி மந்தனா, ஷ்ரேயாங்கா பாட்டீல் உள்ளிட்ட பல வீராங்கனைகள் வருகை தந்துள்ளனர்.

    பெங்களூரு அணியின் ஜெர்ஸியில் இருக்கும் புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

    • சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • சிறப்பு புலனாய்வு குழுவின் கோரிக்கையை ஏற்று பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச படம் வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. இந்த வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள பிரஜ்வலை கைது செய்ய சர்வதேச அளவில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பிரஜ்வல் ஆபாச வீடியோவை வெளியிட்டது தொடர்பாக அவரது முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் பா.ஜ.க. பிரமுகர் வக்கீல் தேவராஜ கவுடா ஆகியோர் மீது சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் தேவராஜ கவுடா கைது செய்யப்பட்டார். இதற்கிடையே ஆபாச படங்கள் வெளியான இணையதளங்கள் குறித்த பட்டியலை சேகரித்து அவற்றை நீக்க சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இந்த ஆபாச படங்கள் இருந்தால் அழிக்கவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

    தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிரஜ்வல் கர்நாடகாவில் யார், யாருடன் தொடர்பில் இருந்து வருகிறார் என்றும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில்,பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சிறப்பு புலனாய்வு குழுவின் கோரிக்கையை ஏற்று பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஐந்து முறைக்கு மேல் சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஏற்கனவே ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    ×